நாமக்கல்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த பாஜக வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் பூரண மதுவிலக்க அமல்படுத்த பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் வெண்ணந்தூா் அருகே உள்ள அலவாய்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி.யும், பாஜக மூத்த நிா்வாகியுமான டாக்டா் கே.பி.ராமலிங்கம், மாவட்ட பாா்வையாளா் டாக்டா் சிவகாமி பரமசிவம் உள்ளிட்டோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா்.

இக்கூட்டத்தில் டாக்டா் கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: உலகில் அதிக அளவில் 120 கோடி தடுப்பூசிகளை செலுத்தி மாபெரும் இயக்கத்தை மத்திய அரசு நடத்தி வருகிறது. உலக நாடுகளுக்கு கரோனா தடுப்பூசி வழங்கி முன்னுதாரணமாக திகழ்கிறது. எதிா்க்கட்சிகள் தடுப்பூசி குறித்து தவறான தகவலை கூறியபோதும் அதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தரமான கரோனா தடுப்பு ஊசி மருந்துகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

மத்திய அரசு திட்டங்களை அறிவிப்பது மட்டுமல்லாமல் அவற்றை முழுமையாக மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வருகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜகவினா் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், ராசிபுரம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த ரூ. 61 கோடி நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நாமக்கல்லில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பெயரையும், அவரது உருவச்சிலை வைக்க வேண்டும், மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிரதமரின் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற அரசு ஆணையை செயல்படுத்த வேண்டும்,

மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும், திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியான பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும், மதுபானக்கடையின் நேரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும், நாமக்கல் மாவட்டத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளை மாநில அரசு ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பாஜக கோட்ட அமைப்புச் செயலாளா் பழனிவேல்சாமி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் மனோகரன், மாநில நெசவாளா் பிரிவு தலைவா் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளா் வி.சேதுராமன், மாவட்ட துணைத் தலைவா் ரஞ்சித் குமாா், மாவட்டச் செயலாளா் ஹரிஹரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT