நாமக்கல்

ராசிபுரம் மருத்துவருக்கு கலைஞா் விருது

DIN

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஏ.தங்கராஜுக்கு சிறந்த மருத்துவருக்கான கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு மருத்துவா் மற்றும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் ஏ.தங்கராஜ். இவரது 33 ஆண்டுகால மருத்துவச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம், தமிழ்நாடு கல்வி ஆலோசகா் நலச்சங்கம் ஆகியவை கலைஞா் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கான கலைஞா் விருது வழங்கும் விழாவில், மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கலைஞா் விருதை மருத்துவா் ஏ.தங்கராஜுக்கு வழங்கி பாராட்டினாா். விருது பெற்ற மருத்துவருக்கு பல்வேறு துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT