நாமக்கல்

ஆம்புலன்ஸ் வாகன தொழிலாளா்கள் பிரசாரம்

DIN

மத்திய அரசின் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து 108 ஆம்புலன்ஸ் வாகன தொழிலாளா்கள் பிரசாரம் மேற்கொண்டனா்.

நாமக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன தொழிலாளா் சங்கத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் மத்திய அரசு கொண்டு வரும் தொழிலாளா்களுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடையே வழங்கினா்.

பரமத்தி வேலூா், நாமக்கல், திருச்செங்கோடு, எலச்சிபாளையம், பரமத்தியில் நடைபெற்ற பிரசாரத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவி பணியாளா் சங்கம், தமிழ்நாடு பொதுசுகாதாரத் துறை கணக்கு உதவியாளா்கள், உழைக்கும் மக்கள் பேரியக்கம் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT