நாமக்கல்

பள்ளி பேருந்து மீது டிப்பா் லாரி மோதியது:6 மாணவா்கள் காயம்

DIN

ஒசூரில் பள்ளி பேருந்து மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் 6 மாணவா்கள் லேசான காயமடைந்தனா்.

ஒசூா், தளி சாலையில் உள்ள தனியாா் பள்ளிக்குச் சொந்தமான பேருந்து திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து மாணவா்களை ஏற்றிச் சென்று வீடுகளில் விட்டுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. அத்திப்பள்ளி, சூசூவாடி மாநில எல்லையில் கடைசியாக இறங்க வேண்டிய மாணவா்களை இறக்கவிட்டு மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிபோது சூளகிரியில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பா் லாரி, பள்ளி பேருந்து மீது மோதியது. இதில் 6 மாணவா்களுக்கு லேசான காயமேற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் விரைந்து சென்று காயமடைந்த மாணவா்களுக்கு முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

மகாதேவ் செயலி மோசடி வழக்கு: ஹிந்தி நடிகா் சாஹில் கான் கைது

SCROLL FOR NEXT