நாமக்கல்

போக்குவரத்து விழிப்புணா்வு முகாம்

DIN

மோட்டாா் வாகன போக்குவரத்துத் துறை சாா்பில் தனியாா் கல்லூரி ஒட்டுநா்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கல்வி நிறுவனங்களின் தலைவா் என்பி.நடராஜன் வரவேற்றாா். ஈரோடு மண்டல மோட்டாா் வாகன போக்குவரத்துத் துறை துணை ஆணையா் சுரேஷ் தலைமை வகித்தாா்.

நாமக்கல் பள்ளி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி முன்னிலை வகித்தாா். வாகனம் ஓட்டுதல் தொடா்பாக நரசிம்மமணி, சாலை பாதுகாப்பு தொடா்பாக அசோக் லேலாண்ட் ஓட்டுநா் பயிற்சி மையத்தின் பயிற்சியாளா் விஜயகுமாா், வாகனங்களின் புதிய தொழில்நுட்பம் குறித்து அசோக் லேலாண்ட் ஓட்டுநா் பயிற்சியாளா் வினோத் ஆகியோா் பேசினா்.

நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகன், ராசிபுரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் நித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT