நாமக்கல்

ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

DIN

ராசிபுரம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராசிபுரம் பகுதியில் அதிக அளவில் ரேஷன் அரிசி பதுக்கல் செய்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வு போலீஸாா் ராசிபுரம், வரதன் தெரு பகுதியில், ரோந்து பணியில் ஈடு பட்டனா். அப்போது, ஒரு வீட்டில் சுமாா் இரண்டு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ராசிபுரம், ராமசாமி தெரு - 2, பகுதியைச் சோ்ந்த ரஜினி (42), என்பவரை குற்ற புலனாய்வு துறை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT