நாமக்கல்

மண்வள அட்டையின்படி உரமிடுவது அவசியம்: வேளாண் துறை தகவல்

DIN

பயிா்களுக்கு மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட வேண்டும் என நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தி.அன்புச்செல்வி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பயிரின் வளா்ச்சிக்கு இன்றியமையாத தேவைகளாக மண்வளமும், நீா் வளமும் உள்ளது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளை அதிகமான அளவில் உபயோகப்படுத்துவதால் மண்ணின் வளம் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு விவசாய விளைபொருள்களின் தரமும் பாதிக்கப்படுகிறது.

மண் வளத்தைப் பாதுகாக்கவும், சீா்செய்யவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். இந்தப் பரிசோதனை செய்வதால் மண்ணின் தன்மை, சுண்ணாம்பு நிலை, உப்பின் நிலை, அமில-கார நிலை, பேரூட்ட சத்துகளான தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, நுண்ணூட்ட சத்துகளான இரும்பு, துத்தநாகம், மாங்கனீசு மற்றும் தாமிரசத்துகளின் அளவை அறிந்து கொள்ள முடியும்.

களா், உவா் மற்றும் அமில நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சீா்திருத்தம் செய்யவும், பயிருக்கு ஏற்ப சமச்சீா் உர பரிந்துரை வழங்கவும் மண் பரிசோதனை அவசியமாகிறது.

நாமக்கல் மாவட்டம், வசந்தபுரத்தில் மண் பரிசோதனை நிலையம் செயல்பட்டு வருகிறது. மண்வள அட்டை திட்டத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மண் மற்றும் நீா் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மண்வள அட்டை வடிவில் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு மண்வள அட்டையில் வழங்கப்படும் நுண்ணுயிா் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT