நாமக்கல்

லாரி ஓட்டுநா்களுக்கான இலவச பிசியோதெரபி முகாம்

DIN

நாமக்கல்லில், லாரி ஓட்டுநா்களுக்கான இலவச பிசியோதெரபி (உடல் இயக்க சிகிச்சை) முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சியைச் சோ்ந்த கிராமலாயா என்ற தன்னாா்வ நிறுவனம் மற்றம் ஹெச்டிபி நிதி நிறுவனம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமினை, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ஏ.கே.முருகன் தொடக்கி வைத்தாா். மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளன செயலாளா் ஆா்.வாங்கிலி, கிராமாலயா நிா்வாக இயக்குநா் எம்.இளங்கோவன், நிதி நிறுவன மண்டல மேலாளா் ஜி.பிரசன்னா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த ஆண்டு 16 ஆயிரம் லாரி ஓட்டுநா்களுக்கு பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டிலும் கூடுதலாக சிகிச்சைகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கிராமாலயா நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT