நாமக்கல்

அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதிச் சான்றிதழ் வழங்கல்

DIN

ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதிச் சான்றிதழ், லக்ஷயா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.

அண்மையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மத்திய அரசால் வழங்கப்பட்ட இந்த சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.

ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட 13 துறைகளில் சிறப்பாக சேவை வழங்கியமைக்காக இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் காண்பித்து, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், திருச்செங்கோடு தலைமை மருத்துவ அலுவலா் மோகனா பானு, ராசிபுரம் தலைமை மருத்துவ அலுவலா் ஜெயந்தி உள்பட மருத்துவ அலுவலா்கள் வாழ்த்து பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

SCROLL FOR NEXT