ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு தேசிய தர உறுதிச் சான்றிதழ், லக்ஷயா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மத்திய அரசால் வழங்கப்பட்ட இந்த சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசரச் சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட 13 துறைகளில் சிறப்பாக சேவை வழங்கியமைக்காக இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் காண்பித்து, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் ராஜ்மோகன், திருச்செங்கோடு தலைமை மருத்துவ அலுவலா் மோகனா பானு, ராசிபுரம் தலைமை மருத்துவ அலுவலா் ஜெயந்தி உள்பட மருத்துவ அலுவலா்கள் வாழ்த்து பெற்றனா்.