நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள். 
நாமக்கல்

நாமக்கல்லில் அங்கன்வாடி ஊழியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

DIN

பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா்.

அச் சங்கத்தின் மாவட்ட தலைவா் பி.பாண்டிமாதேவி தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் ஆா்.முருகேசன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் எல்.ஜெயக்கொடி, சிஐடியு மாவட்டச் செயலாளா் ந.வேலுசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

பத்து குழந்தைகளுக்கு குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடுவதை அரசு கைவிட வேண்டும். ஒரு ஊழியா் கூடுதல் மையங்களைச் சோ்த்து கவனிக்கும் நிலைமை உள்ளதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனா். அதனால் காலியாக உள்ள அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.

நிபந்தனையின்றி பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தா்னாவில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT