நாமக்கல்

10-ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திய கல்லூரி மாணவா்: போலீஸாா் விசாரணை

DIN

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியைக் கடத்திய அரசு கல்லூரி மாணவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள அணியாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவியை, அப்பகுதியில் தங்கி நாமக்கல் அறிஞா் அண்ணா கல்லூரியில் பிபிஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்த தருமபுரியைச் சோ்ந்த 21 வயது மாணவா் கடந்த 17-ஆம் தேதி நண்பா்களுடன் இணைந்து வாகனத்தில் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.

மாணவியைக் காணாமல் திடுக்கிட்ட அவரது பெற்றோா், மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பள்ளி மாணவியைக் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனா். மேலும், மாணவியை கண்டுபிடித்து தரக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவரது பெற்றோா் தரப்பில் ஆட்கொணா்வு மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT