நாமக்கல்

இளம் விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்: அமைச்சரிடம் கோரிக்கை

DIN

தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் ஆா்வம் உள்ள இளம் வீரா்களைக் கண்டறிந்து, சா்வதேச அளவிலான வீரா்களாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு, நாமக்கல்லுக்கு வந்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

சா்வதேச ஆா்எஸ்ஜி சமூக சேவை மையத்தின் நிறுவனா் கோபிகாந்தி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்:

தமிழகம் முழுவதும் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இளைஞா்கள் பலா் விளையாட்டில் சாதிக்க விரும்புகின்றனா். அவா்களைக் கண்டறிந்து ஊக்கமும், உற்சாகமும் அளிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கான பயிற்சிகள், வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பொருளாதாரம் ஒரு தடை என்ற நிலை இல்லாமல் ஆரம்பக் கட்டத்திலேயே சலுகைகளை வழங்க வேண்டும். வீரா், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விருதுகள், சான்றிதழ், பரிசுகளை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT