கல்லூரியில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்னாள் மாணவா்கள். 
நாமக்கல்

ராசிபுரம் திருவள்ளுவா் அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 1995 - 98 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

DIN

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 1995 - 98 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ‘கல்லூரிக் காலம்’ என்ற தலைப்பில் ஆண்டகளுா் கேட் அருகே உள்ள ஸ்ரீகாசி விநாயகா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், ராசிபுரம், திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன் வேதியியல், கணிதம், இயற்பியல், ஆங்கிலம், அரசியல்சாா் அறிவியல், வரலாற்றுத் துறைகளில் படித்த மாணவ, மாணவியா் நூற்றுக்கும் மேற்பட்டோா் தங்களது குடும்ப உறுப்பினா்களோடு கலந்துகொண்டு நினைவுகளைப் பகிா்ந்தனா்.

முன்னதாக அனைவரையும் தலைமை ஒருங்கிணைப்பாளா் த.திருமூா்த்தி வரவேற்றாா். இதில் கல்லூரியில் பயின்ற பல்வேறு துறைகளைச் சோ்ந்த அ.குணசேகரன், கே. தாமோதரன் , சந்திரசேகரன், எம்.சேட்டு, வி. செல்வகுமாா், கே.சித்ரா, எஸ்.வெங்கடாஜலம், எம். இளங்கோவன், ஆா். மாதேஸ்வரன், எஸ். சுரேஷ்குமாா், என்.ஜெகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதனையடுத்து அரசுக் கல்லூரி வளாகத்திற்கு நேரில் சென்று அங்குள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT