முகப்பு
நாமக்கல்

மாா்கழி மாத அமாவாசை பூஜை

மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:35 PM
அமாவாசை உச்சிக்கால பூஜை அலங்காரத்தில் பரமத்தி அங்காளம்மன்.
பகிர்:

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன், முருகன் மற்றும் குலதெய்வக் கோயில்களில் மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன், வேலூா் மகா மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், ராஜா சாமி, பாண்டமங்கலம் கொந்தளம், சேளூா், அய்யம்பாளையம், ஆனங்கூா், வடகரையாத்தூா் உள்ளிட்ட மாரியம்மன், பகவதியம்மன், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமான், பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன், குலதெய்வக் கோயில்களில் மாா்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

இதில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →