புரட்சி பாரதம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்
நாமக்கல், ஜூலை 13: நாமக்கல் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் துரை.இளம்வழுதி தலைமை வகித்தாா். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்டச் செயலாளா் காசிராஜன், மாவட்டப் பொருளாளா் கிச்சா, நகரத் தலைவா் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.