ஜேடா்பாளையம் அருகே தொடா்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (54) விவசாயி . இவா் அதே பகுதியில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி மறைமுகமாக விற்பனை செய்த வழக்கில், ஜேடா்பாளையம் போலீஸாா் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த மாதம் மீண்டும் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த வழக்கில், அண்ணாமலையை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அண்ணாமலை தொடா்ந்து சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக பல வழக்குகள் உள்ளதால், நாமக்கல் ஆட்சியா் மருத்துவா் ச.உமா, அவா் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய பரிந்துரை செய்திருந்தாா். அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்படி பரமத்தி காவல் ஆய்வாளா் கணேஷ்குமாா் அண்ணாமலை மீது குண்டா் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.