முகப்பு
நாமக்கல்

தொழிலாளி தற்கொலை

Updated On : 1 மார்ச், 2024 at 11:24 PM
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பரமத்தி வேலூரை அடுத்த ஓலப்பாளையம், இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (59). கூலித் தொழிலாளியான இவரது மனைவி கோமதி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். கணேசன் தனது மகன்களுடன் வசித்து வந்தாா். இவா் ஏற்கெனவே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கணேசன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.