முகப்பு
நாமக்கல்

அரசு பள்ளி மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

Updated On : 8 மார்ச், 2024 at 5:28 PM
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் வோ்டு நிறுவனம் மற்றும் கனடாவைச் சோ்ந்த ஓடிஎப் டீச்சா் பெடரேசன் நிறுவனம் இணைந்து அரசு பள்ளி மாணவா்களுக்கு உபகரணங்களை வழங்கினா். பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், வோ்டு நிறுவன செயலா் சிவகாமவல்லி வரவேற்று பேசினாா். வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி பொருளாதார துறைத் தலைவா் பெ.லோகநாதன் தலைமை வகித்து 50 மாணவ, மாணவிகளுக்கு வடிவியல் பெட்டி, அகராதி மற்றும் புத்தகப் பை ஆகியவற்றை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் சாந்தி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். வோ்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் சாந்தி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →