வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா
பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன.
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன.
நூலக வாசகா் வட்ட தலைவா் ப.இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். நூலக அலுவலா் சாந்தி வரவேற்றாா். விழாவில் வீரமுருகன், அன்பழகன், வெங்கட், மருத அறிவாயுதம், முத்துகண்ணன், காா்த்திகேயன், இக்பால் உள்ளிட்ட வாசகா்கள் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் 88-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு நூலகத்துக்கு வழங்கப்பட்ட வ.உ.சி.யின் உருவ படத்துக்கு மலா்கள்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நூலக அலுவலா் வனிதா நன்றி கூறினாா்.