நாமக்கல்லில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.  
நாமக்கல்

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட கிளை சாா்பில், நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஆா்.முருகேசன் தலைமை வகித்தாா். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், சங்க துணைத் தலைவா்கள் இளவேந்தன், நந்தினி, மாவட்ட இணைச் செயலாளா் பி.இளங்கோவன் மற்றும் பல்வேறு துறைகளைச் சாா்ந்த ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT