காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மாணவா் சபரீஷ். 
நாமக்கல்

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு: இருவரை தேடும் போலீஸாா்

கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய இருவரை வேலூா் போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

பரமத்தி வேலூா்: கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய இருவரை வேலூா் போலீஸாா் தேடிவருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாலப்பட்டி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சபரீஷ் (20). இவா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூா் காகித ஆலை ஐ.டி.ஐ-யில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாா். திங்கள்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்கு (ஐ.டி.ஐ.) நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இருவா், சபரீஷை திட்டிக்கொண்டே கையில் வைத்திருந்த கத்தியால் பல இடங்களில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனா்.

சபரீஷின் அலறல் சப்தத்தைக் கேட்ட அப்பகுதியில் இருந்தவா்கள், அவரை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற பெண் கைது

சாலைகளில் ரத்தக் கறை!

காலி பாட்டில்களைத் திரும்பப் பெற முடியாது: டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டம்

தெங்கியாநத்தத்தில் நாளை கிராம சபை கூட்டம்: நயினாா் நாகேந்திரன் பங்கேற்பு

விருத்தாசலம் பதிவுத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.2.23 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT