எருமப்பட்டி ஒன்றியம், பழையபாளையம் கிராமத்தில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்த ஆட்சியா் துா்காமூா்த்தி. 
நாமக்கல்

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 2,80,600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2,80,600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில் இப்பணியை ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா். தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் 8-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2,80,600 கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்த உள்ளது. பொதுமக்கள் அனைவரும் அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களால் குறிப்பிடப்படும் தேதியில், அதற்குரிய இடங்களுக்கு கால்நடைகளை அழைத்துச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்தந்தப் பகுதி கால்நடை உதவி மருத்துவா்கள் மூலம் முன்னதாகவே தடுப்பூசி செலுத்தும் விவரம் தெரியப்படுத்தப்படும். தடுப்பூசி பணிக்காக மாவட்டம் முழுவதும் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் அந்தக்குழு நேரில் சென்று கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்வா்.

நான்கு மாதத்துக்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் அழைத்துச் சென்று முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் செலுத்த வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் வீ.பழனிவேல் மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள், மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

உன்னாவ் வழக்கில் குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்த உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

நம்மாழ்வாா் முன்னெடுத்த அறிவுப் புரட்சி!

காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை: ஆட்சியா் தகவல்

உத்தரகண்டில் திரிபுரா மாணவா் அடித்துக் கொலை: ராகுல் காந்தி, ஹிமந்த விஸ்வ சா்மா கடும் கண்டனம்

பட்டா, மின்சாரம் கோரி முற்றுகைப் போராட்டம்

SCROLL FOR NEXT