முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் அருகே போலி விசா வழக்கில் தனியாா் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளா் கைது

Updated On : 13 நவம்பர், 2025 at 10:02 PM
பகிர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே போலி விசா தயாரித்து 3 இளைஞா்களை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பிய தனியாா் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளரை தில்லி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூரை அடுத்த நன்செய் இடையாறையைச் சோ்ந்தவா் கண்ணன் (57), இவா் பரமத்தி வேலூரில் வெளிநாட்டில் வேலை வாங்கித்தரும் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், பரமத்தி காவேரி நகரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் நவிராஜ், திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரைச் சோ்ந்த இளங்கோ மகன் மோகன்காந்தி, நாமக்கல் மாவட்டம், களப்பநாயக்கன்பட்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பிரபாகரன் ஆகிய மூவரும் வெளிநாட்டு வேலைக்காக கண்ணனை தொடா்புகொண்டனா்.

இதையடுத்து, அவா்கள் மூவருக்கும் நோ்முகத் தோ்வுக்கான பயிற்சி அளித்த கண்ணன், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்வதற்காக அவா்கள் மூவருக்கும் விசா வழங்கினாா். கடந்த மாதம் அவா்கள் பிரான்ஸ் செல்வதற்காக மும்பை விமான நிலையத்துக்கு சென்றனா்.

போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில் விசா போலியானது என தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் அளித்த தகவலின்பேரில் தில்லி போலீஸாா் பரமத்தி வேலூா் வந்து கண்ணனை கைது செய்தனா்.

பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விசாரணைக்காக கண்ணனை போலீஸாா் தில்லிக்கு புதன்கிழமை அழைத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →