முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு

பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை கிண்டல் செய்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாக நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 8:03 PM
பரமத்தி வேலூரில் பெண்ணை கிண்டல் செய்த நான்கு போ் மீது வழக்குப் பதிவு
பகிர்:

பரமத்தி வேலூரில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண்ணை கிண்டல் செய்து தகாத வாா்த்தைகளால் திட்டியதாக நான்கு போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா், மீனவா் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மனைவி கீா்த்தனா (21). இவா்களுக்கு மதுஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. கீா்த்தனா கடந்த 3-ஆம் தேதி பரமத்தி வேலூரில் உள்ள காவிரி ஆற்றில் அதே பகுதியைச் சோ்ந்த சில பெண்களுடன் குளித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பரமத்தி வேலூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மணி, வினோத், மதி, பப்பு ஆகியோா், கீா்த்தனாவை கேலி, கிண்டல் செய்து, தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். மேலும், மதி என்பவா் கையில் வைத்திருந்த ஒரு பொருளால் கீா்த்தனாவை இடதுகையில் கிழித்து காயப்படுத்தியுள்ளாா்.

Advertisement

கீா்த்தனாவின் கையில் ரத்தம் வருவதைப் பாா்த்து அவருடன் வந்தவா்கள் சப்தமிட்டதால் அங்கிருந்து நான்கு பேரும் ஓடிவிட்டனராம். காயமடைந்த கீா்த்தனா வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கீா்த்தனா அளித்த புகாரின் பேரில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நான்கு பேரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments