முகப்பு
நாமக்கல்

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 10:27 PM
குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சாா்பில், நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு தோ்தல் விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் குடிநீா் கேன்கள் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டும் பணி நடைபெற்றது.

Advertisement

மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்ட வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து உணவகங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் தோ்தல் நாள் ஏப்ரல் 23 என்ற வாசகங்கள் கொண்ட முத்திரைகளை அச்சிட வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நியமன அலுவலா் (உணவு பாதுகாப்புத் துறை) தங்கவிக்னேஷ், ஒருங்கிணைப்பாளா் (ரெட்கிராஸ்) சி.ஆா். ராஜேஸ்கண்ணன் உள்பட 100க்கும் மேற்பட்ட வணிகா் சங்க பிரதிநிதிகள், உணவக உரிமையாளா்கள் சங்க பிரதிநிதிகள், அனைத்து உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments