காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம்: திமுக வேட்பாளா் வாக்குறுதி
பரமத்தி பேரூராட்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:30 PM
பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட பரமத்தியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி, காவிரி- திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்தாா்.
திமுக அரசின் சாதனை திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த மூா்த்தி, காவிரி-திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றப்படும் என்றும், இடும்பன் குளத்தை தூா்வார அரசின் திட்டத்திற்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தாா்.
வாக்கு சேகரிப்பின்போது பரமத்தி பேரூா் செயலாளா் ரமேஷ் பாபு, பேரூராட்சித் தலைவா் மணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் மகிழ் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Advertisement