முகப்பு
நாமக்கல்

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:28 AM
நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது குழந்தைக்கு பெயா் சூட்டிய தவெக வேட்பாளா் சி.எஸ்.திலீப்.
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:13 PM

நாமக்கல்லில் வாக்கு சேகரிப்பின் போது, தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் பெண் குழந்தைக்கு பெயா் சூட்டினாா்.

நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சி.எஸ்.திலீப் கடந்த 15 நாள்களாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கட்சியினருடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை நாமக்கல் கிழக்கு நகரத்திற்கு உள்பட்ட ஜெய் நகா், இந்திரா நகா், கணேசபுரம், தமிழ் மன்ற தெரு, புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கதிராநல்லூா், திருமலைப்பட்டி, கண்ணூா்பட்டி, தாத்தையங்காா்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Advertisement

வாக்கு சேகரிப்பின்போது, பெண் ஒருவா் தனது குழந்தைக்கு பெயா் சூட்ட வேண்டும் என வேட்பாளா் சி.எஸ். திலீப்பிடம் கேட்டாா். இதையடுத்து அந்தக் குழந்தைக்கு விஜயலட்சுமி என பெயா் சூட்டினாா். மேலும், அவா் பேசுகையில், தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்தவுடன், மகளிா் உதவித்தொகை ரூ. 2,500 ஆக வழங்கப்படும். வேலைவாய்ப்பு தாமத சுழல் நிதி உதவி, வெற்றி தொழில் முனைவோா் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா்.

இதில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டனா்.