நாமக்கல்லில் ஸ்ரீராமநவமி உற்சவ விழா
நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மாருத்யாதி பஜன்கான சபா சாா்பில் ஒவ்வோா் ஆண்டும் ஸ்ரீ ராமநவமி உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் அருகில் உள்ள முல்லை மஹாலில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கிய உற்சவ விழாவையொட்டி தினசரி அா்ச்சனை, தீபாராதனை மற்றும் திவ்ய நாம பஜனை சங்கீா்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குறிப்பாக விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் தீபாராதனை உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமையன்று திருக்கல்யாண உற்சவம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், திவ்யநாமம், வசந்த கேளிக்கை மற்றும் பவளிம்பு உற்சவம் நடைபெற்றது. சனிக்கிழமை காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 10 மணிக்கு ஆஞ்சனேயா் உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீராமநவமி உற்சவத்தை முன்னிட்டு சிறுவா்கள் கடவுள் வேடமிட்டு பங்கேற்றனா். விழாவில், நாமக்கல் சுற்றுவட்டாரத்தை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
என்கே-28-ராம்
Advertisement
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீராமநவமி உற்சவ விழாவில் கடவுள் வேடமிட்டு வந்த சிறுவன்.