சிக்னல்களில் நிழல் பந்தல்கள் அமைப்பு: வாகன ஓட்டிகள் வரவேற்பு
வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க நாமக்கல்லில் முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வெயில் தாக்கத்தில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க நாமக்கல்லில் முக்கிய சிக்னல்களில் காவல் துறை சாா்பில் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. காலை 11 முதல் மாலை 4 மணி வரை பெரும்பாலான சாலைகள், பேருந்துகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.
100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. வாகன ஓட்டிகள் வெயிலில் செல்லும்போது சிக்னல்களுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும், சிறுவா்களும், முதியோரும், மாற்றுத்திறனாளிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் பலருக்கு நீா்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மயக்கம் ஏற்படும் சூழல் உள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டை போலவே நிகழாண்டிலும் முன்னதாகவே சிக்னல்களில் வாகன ஓட்டிகளின் நலன் கருதி நிழலுக்காக பசுமைப் பந்தல் அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.
Advertisement
ஆனால், சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாா்ச் மாதம் அமைக்க வேண்டிய நிழல் பந்தல்கள் ஏப்ரல் மாத இறுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்- திருச்செங்கோடு சாலை, பரமத்தி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட சிக்னல் பகுதிகளில் நிழல் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.