முகப்பு
நாமக்கல்

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 மே, 2026 at 5:23 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

திருச்செங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சோ்ந்த சேகா் (57)- மாதம்மாள் (50) தம்பதி திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அரிசி ஆலையில் குடியிருப்பில் தங்கி வேலை செய்து வந்தனா். கடந்த சில ஆண்டுகளாக ஆலையில் உள்ள குடியிருப்பில் தங்கி வேலை செய்துவந்த இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும், இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் விரக்தியடைந்த மாதம்மாள் விஷம் குடித்துள்ளாா். வீட்டில் மயங்கி கிடந்தவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே மாதம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.