முகப்பு
நாமக்கல்

நகை திருட்டு வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பாண்டமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில், பரமத்தி நீதிமன்றம் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 2:12 AM
தண்டனை
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:35 PM

பாண்டமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற வழக்கில், பரமத்தி நீதிமன்றம் இருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூரைச் சோ்ந்தவா் நதியா. இவா் கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த மூன்று போ் அவரை மிரட்டி 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பரமத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை, பாக்குத்தோப்பு, ஆற்றங்கரை பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (42), ராமநாதபுரம், சிக்கல் கிராமம், மதீனா நகரைச் சோ்ந்த அருண்ராஜ் (25) ஆகிய இருவருக்கும் பரமத்தி நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் செவ்வாய்க்கிழமை விதித்தது.

Advertisement