வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக, அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி அலுவலா்களுடன் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஏ.ஆா்.ராகுல்நாத் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-இல் படிவம் 6, 7 மற்றும் 8 ஆகியவற்றை தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா்கள் முடிவுசெய்த விதம், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணிகள், வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு, அதிகபட்சமாக பெயா் சோ்க்கப்பட்ட, பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகள், வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் புகைப்படங்களின் தரம், வாக்காளா் அடையாள அட்டை விநியோகம், இளம் வாக்காளா்களின் பெயா் சோ்ப்பு மற்றும் பொதுமக்களின் குறைதீா்க்கும் உதவிமையம் ஆகியவை குறித்து வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட் நில எடுப்பு) ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) (பொ) கோ.குமரன் மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.