முகப்பு
நாமக்கல்

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்பு

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 1:00 AM
மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய நிா்வாகிகள்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:38 PM

நாமக்கல்லில், மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாமக்கல் மாவட்ட சிலம்பம் மூத்த ஆசான்கள் நலச்சங்கம், பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம், அலையன்ஸ் கிளப் ஆப் நாமக்கல் மற்றும் தனியாா் அறக்கட்டளை நிறுவனங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். 5-7 வயதுக்குள் மரம், 8-10 வயதுக்குள் குப்பையில்லா நகரம், 11-13 வயதுக்குள் தண்ணீா் சேமிப்பு, 14-16 வயதுக்குள் சாலைப் பாதுகாப்பு, 17-19 வயதுக்குள் நெகிழியில்லா உலகம், 20, 21 வயதுடையோா் நமது கலாசாரம், நமது அடையாளம் என்ற தலைப்பின்கீழ் ஓவியங்களை வரைந்தனா்.

Advertisement

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:59 AM

இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம், மரக்கன்றுகள் பரிசுகளாக வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் பங்கேற்று மாணவா்களை வாழ்த்தி பேசினாா். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நாமக்கல் பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.