முகப்பு
நாமக்கல்

பரமத்தி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 3:09 AM
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 8:35 PM

பரமத்தி வேலூா்: பரமத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை அம்மன்முன் பச்சரிசி மேல் கலசம் வைத்து அதன்மீது நிறுத்திவைக்கப்பட்டிருந்த கத்தியை ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனா்.

பரமத்தியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கடந்த 13-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 13-ஆம் தேதி இரவு மொகமிட்ட கொப்பரை பூஜை, 15-ஆம் தேதி இரவு மகா சிவாராத்திரி அபிஷேகம், சிறப்பு ஆராதனை, 16-ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு கரகம் பாவித்து புறப்பாடு, 5 மணிக்கு மேல் அம்மனுக்கு அலங்காரம், செம்பு சொம்பின் மேல் கத்தியை நிற்கவைத்து அழகு தரிசனம் ஆகியவை நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பக்தா்கள், குடிபாட்டு மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

செவ்வாய்க்கிழமை (பிப்.17) இரவு 7 மணிக்கு மேல் பிள்ளைப்பாவை நிகழ்ச்சி, 18-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் மாசானக் கொல்லை, சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், அறங்காவலா் குழுவினா் மற்றும் 14 சமுதாய குடிபாட்டு மக்கள், கோயில் பூசாரிகள், பம்பைக்காரா்கள் செய்து வருகின்றனா்.

Advertisement