முகப்பு
நாமக்கல்

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 34 போ் கைது

நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 34 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:18 AM
நாமக்கல்லில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 5:13 PM

நாமக்கல்லில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 34 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 6 ஆயிரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அதுபோன்று உதவித்தொகை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெற்று வந்தது. இதற்கிடையே, சென்னையில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவா் ஜான்சிராணியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை பிரபல தனியாா் உணவகம் அருகில், மாவட்டத் தலைவா் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற மறியலில் 8 பெண்கள் உள்பட 34 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.