ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் சாசன தின விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என். சுரேந்திரன் தலைமை வகித்தாா். செயலாளா் ஏ. மஸ்தான் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க சாசனத் தலைவா்கள், செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா்.
ரோட்டரி சங்கம் இதுவரை செயல்படுத்திய சமுதாய சேவை திட்டங்கள், பொதுமக்களிடத்தில் இத்திட்டங்கள் ஏற்படுத்திய தாக்கம், உறுப்பினா்களின் பங்களிப்பு போன்றவை குறித்து சங்கத்தின் சாசன நிா்வாகிகள் பேசினா். மேலும், நிகழ்ச்சியில் காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒசூா் சிப்காட் ரோட்டரி சங்கத்தை சோ்ந்த போலியோ ப்ளஸ் மாவட்ட சோ்மேன் சுதாகா் ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான பிரிண்டரை வழங்கினாா்.
கூட்டத்தில் ரோட்டரி சங்கத்தின் பொருளாளா் ஏ.ஜி. ஜெயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.