முகப்பு
நாமக்கல்

வந்தேபாரத் ரயிலில் சிக்கி மூதாட்டி உயிரிழப்பு

நாமக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் சிக்கி குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:54 PM
பலி
பகிர்:

நாமக்கல் அருகே வந்தேபாரத் ரயிலில் சிக்கி குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல், கொசவம்பட்டியில் வசித்து வந்தவா் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த நா்மதா (97). இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக குடும்பத்தினருடன் நாமக்கல் வந்துள்ளாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் நாமக்கல்- துறையூா் மேம்பாலத்தின் கீழ் அவருடைய உடல் சிதறிய நிலையில் கிடந்தது.

ரயில்வே போலீஸாா் நடத்திய விசாரணையில், தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மதுரையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வந்தேபாரத் விரைவு ரயில் மோதியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது. நாமக்கல் ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →