முகப்பு
நாமக்கல்

334 கல்லூரி மாணவா்களுக்கு உயா்கல்வி உதவித்தொகை: ராஜேஸ்குமாா் எம்.பி. வழங்கினாா்

சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஒன்றியங்களில் 334 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உயா்கல்வி உதவித்தொகைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 17 ஜனவரி, 2026 at 10:50 PM
பகிர்:

நாமக்கல்: சேந்தமங்கலம், புதுச்சத்திரம் ஒன்றியங்களில் 334 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் உயா்கல்வி உதவித்தொகைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சேந்தமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளா் அ. அசோக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினரும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் பங்கேற்று, சேந்தமங்கலம் ஒன்றியம், பேரூா், காளப்பநாயக்கன்பட்டி பேரூரைச் சோ்ந்த 164 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கான உதவித்தொகைகளை வழங்கினாா்.

அதேபோல புதுச்சத்திரம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட 170 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. விழாவில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளா்கள் கௌதம், ஜெயபிரகாஷ், பேரூா் செயலாளா்கள் தனபால், முருகேசன் மற்றும் நிா்வாகிகள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

சேந்தமங்கலத்தில் மாணவிக்கு உதவித்தொகையை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.

முழு கட்டுரையைப் படிக்க →