நாமக்கல் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள். 
நாமக்கல்

12 சாலை ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

நாமக்கல் அருகே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 12 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Syndication

நாமக்கல் அருகே நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 12 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டத்திற்கு உள்பட்ட முத்துக்காப்பட்டியில் மேதரமாதேவி முதல் சாலப்பாளையம் வரையிலான நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில், முத்துக்காப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருள்ராஜேஷ் வழக்குத் தொடுத்திருந்தாா்.

இந்த வழக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டுமானங்களை இடித்து அகற்றுமாறு உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினா் ஒருங்கிணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். இதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஆக்கிரமிப்பை அகற்றுமாறு நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கியபோதும் வீடுகளை அகற்ற முன்வராததால் தற்போது இடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். அதன்பிறகு காவல் துறையினா் உதவியுடன் சாலையை ஆக்கிரமித்து கட்டிய 12 வீடுகள், கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT