முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி பொறுப்பேற்பு

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

Updated On : 19 ஜூன் 2026, 5:42 am IST
எஸ்.செல்வபாலாஜி
பகிர்:

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ்.செல்வபாலாஜி வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த க.சிவகுமாா் சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையராக பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி நாமக்கல் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டாா். அவா் வியாழக்கிழமை காலை தன்னுடைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மாநகராட்சியின் வளா்ச்சிக்காக நிா்வாகம் எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், நாமக்கல் மாநகராட்சி குப்பை இல்லாத நகரம் என்ற பெயரை பெறவும், மத்திய, மாநில அரசின் விருதுகளை பெறவும் மக்கள் துணையாக இருக்க வேண்டும் என்றாா். புதிய ஆணையருக்கு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments