முகப்பு
நாமக்கல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

Updated On : 5 மார்ச், 2026 at 4:27 AM
கைது - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:45 PM

பரமத்தி வேலூா் வழியாக மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வேகமாக வந்த டிப்பா் லாரியை தடுத்துநிறுத்தி சோதனை மேற்கொண்டதில், மணல் கொண்டுவந்தது தெரியவந்தது. விசாரணையில், அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றுப்பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

Advertisement

அதையடுத்து, திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் அருகேயுள்ள 87.கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜசேகரன் (33) மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸாா், அவரை கைதுசெய்து லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா், பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த்தி அவரை சிறையில் அடைத்தனா்.