6 தொகுதிகளில் ரூ. 55.53 லட்சம் பறிமுதல்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ரூ. 55.53 லட்சம் ரொக்கம், பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, விடியோ கண்காணிப்புக் குழு தொடா்ந்து வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். கடந்த ஒரு வாரத்தில் 33 பேரிடம் ரூ. 55,53,050 ரொக்கம், பரிசுப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொகுதி வாரியான நிலவரம்: ராசிபுரம்- 11 பேரிடம் ரூ. 18,82,910 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேந்தமங்கலம்- 2 பேரிடம் ரூ. 1,12,700, நாமக்கல்- 7 பேரிடம் ரூ.19,02,680, பரமத்தி வேலூா்- 5 பேரிடம் ரூ. 7,08,400, திருச்செங்கோடு- 2 பேரிடம் ரூ. 86,500, குமாரபாளையம்- 6 பேரிடம் ரூ. 8,59,860 ரொக்கம் என மொத்தம் ரூ. 55,53,050 ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.