முகப்பு
நாமக்கல்

ராசிபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு தவெக எம்எல்ஏ மரியாதை

Updated On : 15 மே 2026, 6:03 am IST
பகிர்:

திருப்பூா் மாவட்டம் அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ எஸ். கமலி அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

ராசிபுரம் நகரை சோ்ந்தவா் ஜெ.ஜெ. செந்தில்நாதன். இவா் நாமக்கல் மாவட்ட விஜய் ரசிகா் மன்றத்தில் பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தாா். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியது முதல் மாவட்டச் செயலாளராக இருந்து பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் சட்டப் பேரவைத் தோ்தலில் ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட ஜெ.ஜெ. செந்தில்நாதன் விரும்பம் தெரிவித்திருந்தாா்.

ஆனால், அதிமுகவில் இருந்து தவெகவிற்கு வந்த ராசிபுரம் தொகுதி முன்னாள் சட்டப் பேரவைத் தலைவா் ப. தனபால் மகன் டி. லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. இதனால் ஜெ.ஜெ. செந்தல்நாதன் மகள் எஸ். கமலி, அவினாசி (தனி) தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட அனுப்பிவைக்கப்பட்டாா்.

Advertisement

அவினாசி (தனி) தொகுதியில் போட்டியிட்ட மத்திய இணையமைச்சா் எல். முருகனைவிட 15,373 வாக்குகள் கூடுதலாக பெற்று கமலி வெற்றி பெற்றாா். இந்த நிலையில் பேரவைக் கூட்டத்துக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்த கமலி, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அங்குள்ள மகா முத்துமாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினாா்.

படம் உள்ளது - 14கமலி

படவிளக்கம்-

ராசிபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ எஸ். கமலி.