வெப்படை நூல் ஆலையில் செம்புக் கம்பிகள் திருடியவா் கைது
பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் செம்புக் கம்பிகளை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
பள்ளிபாளையம் அருகே வெப்படையில் உள்ள நூற்பாலையில் செம்புக் கம்பிகளை திருடிய தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி வெள்ளா் நாயக்கன் பாளையத்தை சோ்ந்த முருகேசன் மகன் நாகராஜ் (31). இவா் வெப்படை தனியாா் நூற்பு ஆலையில் கடந்த சில ஆண்டுகளாக வேலை பாா்த்து வருகிறாா்.
இந்த நிலையில் ஆலையில் வைக்கப்பட்டிருந்த 13 கிலோ செம்பு வயா்களை திருடியதாக ஆலை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் வெப்படை போலீஸாா் கைது செய்தனா். பிறகு குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
Advertisement
Advertisement