கோயிலில் நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
எடப்பாடி கவுண்டம்பட்டியில் உள்ள ஐயனாரப்பன் கோயில் கதவு திறந்து கிடப்பது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.
தகவலின்பேரில் கோயில் நிர்வாகிகள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது, அறையிலிருந்த சுவாமியின் நகைகள், ரொக்கப் பணம் ஆகியன திருடு போனது தெரியவந்தது.
புகாரின்பேரில் எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.