சேலம் உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளின் சான்றிதழ்கள் புதன்கிழமை (ஜன.18) முதல் வழங்கப்பட உள்ளன.
சேலம் மாவட்டத்தில் ஜூன் 2016-இல் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு, இரண்டாமாண்டு தனித் தேர்வர்களின் சான்றிதழ்கள் உத்தமசோழபுரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை (ஜன.18) முதல் வழங்கப்பட உள்ளன.
எனவே, தனித் தேர்வர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தாங்கள் தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.