சேலம்

ஒடிஸாவுக்கு வெள்ளைக்கல்லை கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

தினமணி

ஓமலூர் பகுதியிலிருந்து வெள்ளைக்கல்லை வெட்டி எடுத்து ஒடிஸாவுக்கு கடத்த முயன்றதாக மூன்று டாரஸ் லாரிகளை கனிமவளத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 சேலம் ஆட்சியர் வா.சம்பத்துக்கு, வெள்ளைக்கல்லை வெட்டிக் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கனிமவளத் துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார்.
 இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், ஓமலூர் சுங்கச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது வெள்ளைக்கற்களைக் கடத்திச் சென்ற மூன்று டாரஸ் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் விலை உயர்ந்த வெள்ளைக்கல்லை, சட்டவிரோதமாக வெட்டி ஒடிஸாவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, மூன்று டாரஸ் லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளைக்கல் மற்றும் மூன்று லாரிகளின் மதிப்பு சுமார் ரூ.65 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது வெள்ளைக்கற்களை வெட்டிக் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT