சேலம்

வாழப்பாடியில் உலக யோகா தின விழா

தினமணி

வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில், உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி உலக யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவு சார்பில், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி வைகை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் திங்கல்கிழமை உலக யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கோ.செல்வமூர்த்தி தலைமை வகித்தார். வைகை கல்வி நிறுவன தலைவர் அய்யாவு வரவேற்றார். வாழப்பாடி அரசு மருத்துமனை தலைமை மருத்துவர் ராதிகா, சித்த மருத்துவ அலுவலர் எஸ். செந்தில்குமார், யோகா மருத்துவர் ஸ்ரீதேவி. பல் மருத்துவர் அனுசுயா ஆகியோர், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் யோகா பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வைகை கல்வி நிறுவன செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT