சேலம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

DIN

ஆத்தூர் ஜோதி நகர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகணேஷ்(33). இவருக்கு தேவி ப்ரியா (28) என்ற மனைவி உள்ளார். இவர், சேலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளதால் கடந்த ஒரு வாரமாக வீடு பூட்டி இருந்துள்ளது.இந்தநிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் சென்றதால் சைரன் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த திருடர்கள் அறையை விட்டு வெளியேறினர்.
இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் தகவல் அளித்ததால் செல்வகணேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ரூ.10 ஆயிரம் திருட்டுப் போனது தெரியவந்தது.
இது குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல் நிலைய ஆய்வாளர் என்.கேசவன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

SCROLL FOR NEXT