சேலம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

செந்தாரப்பட்டியில் சேலம் கிழக்கு  மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்க  மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மகளிர் விடுதலை இயக்கக் கொடி ஏற்றப்பட்டது. இதற்கு  மகளிர் விடுதலை இயக்கம்  சேலம் கிழக்கு மாவட்டச் செயலர் ரேவதிசூரியன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளர் அஞ்சலை, தொகுதி செயலர் சுதா ஆகியோர் வரவேற்றனர். மாநில செயலர் நற்சோணை, மாநில துணைச் செயலர் சாந்தி, கெங்கவல்லி தொகுதி துணைச் செயலர் கக்கன்செல்வகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், மகளிர் விடுதலை இயக்கம் வளர்ச்சி பற்றியும், புது முகாம் கட்டமைப்பு பற்றியும், அனைத்து  ஒன்றியங்களுக்கும் கொடிக் கம்பங்களும், புது விளம்பர பெயர்ப் பலகைகளும் வைப்பதென தீர்மானிக்கப்பட்டது. கெங்கவல்லி ஒன்றியச் செயலர் பிரியா நன்றி கூறினார்.இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கெங்கவல்லி வட்டார நிர்வாகிகள், அந்தந்த ஊர்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT